தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் தகவல்கள் தீயாக பரவி வந்த நிலையில் தற்போது திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் உண்மையை கூறியுள்ளார். அதாவது நடிகை திரிஷா சென்னைக்கு திரும்பவில்லை என்றும், அவர் தொடர்ந்து காஷ்மீரில் தான் படப்பிடிப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளார்.