விண்ணைத்தாண்டி வருவாயா எனும் திரைப்படத்தின் வாயிலாக கவுதம்மேனனும், சிம்புவும் கூட்டணி சேர்ந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சில வருடங்களுக்கு அடுத்து மீண்டும் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் வெற்றியடைய மீண்டும் கடந்த வருடம் இவர்களுடைய 3வது கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் வெளிவந்து வெற்றியை தழுவியது.

இவ்வாறு 3 முறை வெற்றியை கொடுத்துள்ள இந்த இருவருக்கும் இடையில் திடீரென்று மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.