அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு ஆறு வயதாக இருந்தபோது தீ விபத்தில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் அந்த சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். தீ என்றாலே பயந்து நடுங்கியுள்ளார். இப்போது 26 வயதாகும் டெர்ரி மெக்கர்த்தி என்ற அந்த இளைஞர் தீயணைப்பு வீரராக மாறியுள்ளார்.

எந்த நெருப்பு தன்னை காயப்படுத்தியதோ தன்னை அச்சுறுத்தியதோ அதிலிருந்து மற்றவர்களை காப்பாற்ற வேண்டும். அதனுடன் போராட வேண்டும் என்று இந்தப் பணியில் இறங்கி பல வெற்றிகளும் கண்டுள்ளார்.