அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பல மாகாணங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓர்கன், டெனிசி உள்ளிட்ட மாகாணங்களில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 61 பேர் பனிப்புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.