மதுரை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் சின்னாளபட்டியை சேர்ந்த அய்யாதுரை மகள் லட்சுமியை திருமணம் செய்தேன். நாங்கள் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தோம். இதற்காக எனது மாமனாரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான அய்யாதுரையை தொடர்பு கொண்டேன்.

அவர் இடம் வாங்கி தருவதாக கூறி பல்வேறு தவணைகளாக என்னிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் இதுவரை நிலத்தை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.