பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 27-ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடம். அதன் பிறகு ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோன்று ஜனவரி 30-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். மேலும் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.