பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி, அவற்றின் கழுத்தில் அடையாள அட்டையை மாட்டி வருகிறார்கள்.

இந்த அடையாள அட்டையில் QR குறியீடும் உள்ளது. அந்த நாயைப் பற்றிய முழு விவரங்களைதெரிந்து கொள்வதற்கு QR-ஐ ஸ்கேன் செய்து கொள்ளலாம். மேலும் தெருநாய்கள் தொலைந்து போனால், அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து கண்டுபிடித்து கொள்ளலாம்.