மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு கேட்டு போராடி வருகிறார்கள். அதற்கு சூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இது வன்முறையாக வெடித்து மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த வன்முறையில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சூகி பழங்குடியினராய் சேர்ந்த இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளின் கைவைத்து இழுத்துச் செல்லும் வீடியோவானது இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் இளம்பெண்ணின் ஆடைகளை களைந்து பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். கைதான முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தையும் மணிப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். கைதான நபரின் பெயர் ஹுய்ரெம் ஹீரோதாஸ் மெய்தெய் (32) என மணிப்பூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அவனை கைது செய்து போலீசார் கஸ்டடியில் வைத்துள்ளனர். முன்னதாக, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். மேலும், அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.