பொதுவாகவே நாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்லும்போது மருத்துவர்கள் நாக்கை பரிசோதிப்பார்கள். ஏனென்றால் நாக்கு தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். நாம் தினமும் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால் பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியா பாதிப்பு, வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படும். நம்முடைய நாட்டில் விரிசல் காணப்பட்டால் சிறுநீரக பிரச்சனை அல்லது நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

நாக்கு கருப்பாக அல்லது வெள்ளை நிறத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டால் செரிமான பிரச்சனையின் அறிகுறிகள் இருப்பதாக அர்த்தம். நாக்கில் அடிக்கடி புண் ஏற்பட்டால் நீங்கள் அதிக மன உளைச்சலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதுவே நாக்கு மென்மையாக இருந்தால் இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். எலுமிச்சை சாறில் மஞ்சள் தூள் கலந்து நாக்கில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எந்த ஒரு நோய் தொற்றும் நாக்கில் ஏற்படாது.