அமெரிக்க நாட்டில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் 292 பயணிகளுடன் 311 பேர் பயணித்துள்ளனர். இதனை அடுத்து விமானம் ஸ்வீடன் நாட்டின் வான் பரப்பு மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு என்ஜினில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை விமானிகள் கவனித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விமானம் உடனடியாக ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு என்ஜினில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணிகள் நடைபெற்ற வருகின்றது. அதோடு விமானத்தில் இருந்த பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.