கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனையடுத்து புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக்கூடம், காந்தி நினைவு மண்டபம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.