நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவன் கௌதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மோகன் குமார் மற்றும் பூவரசன் ஆகியோர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.