பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சில விபரீதங்கள் நடைபெறக்கூடும். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பிரபு என்ற இளைஞர் இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பங்கெடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரபு தடுமாறி கீழே விழுந்த நிலையில் இளவட்டக்கல் அவரது தலையில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.