கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்தக்கூடாது என கூறியுள்ளார்.

ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தாமல் இருந்தனர். இதுகுறித்து வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.