மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென அந்த வழியாக வந்த லாரி ஹாரன் அடித்ததும் மிரண்டு ஓடியது.

மேலும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரமேஷை காளை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த ரமேஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ரமேஷுக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.