தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மருது பாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில் மற்றும் தேவகோட்டை வட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு 61வது குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது.