தென்காசியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக்ஜாம் புயலில் சென்னை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்த மக்களுக்கு தன்னிடம் சேமிப்பு தொகையாக இருந்த 5 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டேன் .தற்போது தென் மாவட்டங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வெள்ளை பாதிப்பால் மக்கள் ஒவ்வொரு தேவையோடு இருக்கிறார்கள். அதனால் நான் வெறும் கையோடு  செல்ல விரும்பவில்லை. எதையாவது கொண்டு செல்ல உள்ளதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் திரட்டிய நிவாரணக் கதையை பாலாவிடம் கொடுத்த நிலையில் அவர் அதை வாங்க மறுத்து தான் தனது பணத்தில் இருந்து உதவுவதாகவும், இந்த பணத்தை நீங்களே நேரடியாக மக்களுக்கு கொடுங்கள் என்றும் தெரிவித்தது பாராட்டை பெற்றது.