கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கு சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குதிரை சந்தல் கிராமத்தை சேர்ந்த கோபி, ஆகாஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.