மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரண்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மொபைல் போனில் அனுப்பிய குறுஞ்செய்தி, அனைத்து மேடங்களுக்கும் பிற்பகல் வணக்கம்.

எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நான் ஆயுதப்படைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களாக என் மீது யாருக்காவது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள். அனைத்து மேடம்கள் சகோதரிகள் மீது அன்பு செலுத்துகிறேன். உங்களை இழக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.