மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திருச்சியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாமகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இரண்டு நாள்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள்.

தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் கூட்டணியை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், நாங்க அப்படி இல்லை. துளசி வாசம் மாறலாம். ஆனால் தவசி வார்த்தை மாறாது” என விஜயகாந்த் வசனத்தை பேசி பாமகவை விளாசியுள்ளார்.