தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனைப் போலவே பல்வேறு கட்சிகளுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படாமல் உள்ளது.