தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று  நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச் 18ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து மார்ச் இன்று  காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் நகலுடன் வந்து கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.