தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேரில் சந்திக்க மதிமுக தலைவர் துரை வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு இடையே நேற்று இரவு மருத்துவமனை விரைந்தார். பின்பு கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும் தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் கூறினார்.