மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “கோவை ஒரு காலத்தில் குளுகுளு என்று இருந்தது. தற்போது 2 முதல் 3 டிகிரிகள் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லவே முடியாத அளவுக்கு சூடாகி இருக்கிறது. இதை மாற்ற மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்” என்று பேசினார்