தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.