தமிழகத்தில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குபவர்களுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது நடப்பு ஆண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மூன்று கோடியே 55 லட்சம் தொகையை மானியமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் அரசு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதேசமயம் தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் போன்ற திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதாவது அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டப் படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ, தொழில்சார் பயிற்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.