தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக சென்றவர்கள் மழை பெய்யும் என்று அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.