சென்னையில் காவல்துறையினரை மாநாட்டு அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு, பார் உரிமையாளர்களிடம் நேரடியாகப் பேசிய காவல் ஆணையர், லஞ்சப் புகார்கள் குறித்துத் தைரியமாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை வெளியே அமரச் செய்த ஆணையர், பார் உரிமையாளர்களிடம் எவரும் லஞ்சம் தரவேண்டாம் என்றும், அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாகத் தமக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பொதுமக்களை அச்சுறுத்துவதற்கோ அல்லது லஞ்சம் கேட்பவர்களின் கரங்களை நீட்டுவதற்கோ அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், லஞ்சம் கொடுக்கும் கட்டாயத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதே ஆட்சியின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“லஞ்சம் கொடுக்காதீர்கள்… கேட்டால் உடனடியாக என்னிடம் தெரிவியுங்கள்” சென்னை காவல் ஆணையர். 👏🔥
காவல்துறையினரே கூட்ட அரங்கிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு, பார் உரிமையாளர்களிடம் நேரடியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. 💯
அதிகாரம் என்பது மக்களைப்… pic.twitter.com/Bv9709W9eU
— Vivek Rangasamy (@VivekRangasamy) August 12, 2026
“>
தமிழக முதல்வர் விஜயின் லஞ்சமற்ற நிர்வாகம் என்ற லட்சியக் கனவை நனவாக்கும் வகையில் காவல்துறையின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை அமைந்துள்ளது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
