தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூரில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளி மறுநாள் திங்கட்கிழமை வருவதால் விடுமுறைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நவம்பர் 13ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.