பாஜக வருமான வரி துறையை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ஐடி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று. இதில் நேர்மை என ஏதுமில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சியினரையும் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியினரையும் குறி வைத்து ஐடி சோதனை நடக்கிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே இந்த சோதனை என சீமான் தெரிவித்துள்ளார்.