சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது. இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அனிதா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்துவார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.