திருச்சியைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் அதிகாலையில் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஐடி விங்-இன் மாநில செயலாளராக பணியாற்றி வருபவர் புகழ். ராமர் கோயில் திறப்பு நேரத்தில் இவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

கலவரத்தை தூண்டுதல், மத ரீதியான வெறுப்பை விதைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் புகழ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.