மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த பாண்டியன் ஓடும் பேருந்தில் இருந்து தனது மனைவியை எட்டி உதைத்துள்ளார். கீழே விழுந்து நிலை குலைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.