2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமண்டலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் மூன்று லட்சம் பேரை திரட்ட வேண்டுமென மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் உத்தரவிட்டார்.