தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பள்ளி ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே புயல் மற்றும் மழையால் பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலக்கமடைய வைத்துள்ளது.