கொலம்பியாவில் உள்ள பொகட்டோ பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவு பதிவு ஆகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியுள்ளது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டு உள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது மாடியில் வசித்து வந்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு இதேபோன்று கொலம்பியாவில் நடந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.