ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. இது தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தவறான வீடியோக்களை நீக்க வேண்டும் என்று ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. ஆனால் அந்த வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மாஸ்கோவில் உள்ள மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றில் ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூகுளுக்கு 26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு முன்பு ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா நிறுவனங்களுக்கு இதே போன்ற ஒரு குற்றச்சாட்டில் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.