செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது..

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதாவது சைதாப்பேட்டை செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று சாலவாக்கம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து சென்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அவர்கள் விசாரணை செய்ததில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும், முன்னுக்கு பின் முரணாக பல்வேறு பதில்களை கூறியதால் அந்தப் பெண் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு எஸ்.பி சுதாகர் அவரை விசாரித்தபோது ஒரு சில தகவல்கள் அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதால் தற்போது பிரச்சனை காரணமாக ஒரு சில காரணங்களுக்காக பொய்யான ஒரு தகவலை அறிவித்ததும், யாரும் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என கூறியுள்ளார்..

தற்போது தனது ஆண் நண்பரை பலி வாங்க பொய்யான புகாரளித்துள்ளார். அதாவது,திருமணத்திற்கு மறுத்த காதலனை சிக்க வைக்க நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இளம்பெண் விசாரணையின் போது பொய் புகாரளித்ததை  ஒப்புக்கொண்ட இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் 4 பேரும் செங்கல்பட்டிலேயே இல்லை என்பது தெரியவந்துள்ளது.