கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து ஆசனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.