தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல்வர் ஸ்டாலின் நாளை அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு மே 4-ம் தேதி வரை ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். மேலும் முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 4-ம் தேதி வரை அப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.