தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மே 4-ம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.