பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது.

தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுவதாகவும் இதையறிந்து தான் பாஜக அவரை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது. அப்போ ஓ.பி.ரவீந்திரநாத் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே விடை தெரியாமல் குழம்பிப் போய் காணப்படுகிறார்கள்.