நாம் தமிழர் கட்சியிலிருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும் ஜாதி பிரிவினைகளும் சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விரும்பவில்லை. குறிப்பாக ஜாதி பார்த்து நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், மூன்று பேரை தவிர சீமானிடம் யாரும் நெருங்க முடியாது என கடுமையாக பேசியுள்ளார்.