கடலூர் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தற்கொலைக்கு பின் தங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்ணின் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.