மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது நியாயமல்ல. பதவி உயர்வு வழங்காததால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது  என அன்புமணி கூறினார்.