சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.