ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக 5வது நடைமேடையில் வந்து சென்றுள்ளது.

இதனால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்டுள்ளனர். இதனால், காக்கிநாடா ரயிலில் அந்த பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ரயில் வருகை, புறப்பாடு அறிவிப்பு பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.