திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலானது அரசின் உத்தரவின்படி  தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஆவின் பால் உற்பத்தியில் பிற மாவட்டங்களை விட திருநெல்வேலி மாவட்டம்  முன்னிலையில் உள்ளது. இங்கு பெறப்படும் பாலானது, பால், தயிர், நெய், ஐஸ்கிரீம், இனிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது.