மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ ரூ.2.7 லட்சம்.

இவை ஜப்பானில் ஏலத்தில் வாங்கப்படுகின்றன. சங்கல்ப் விஹார் தனது மாம்பழத்தோட்டத்தை 11 வெளிநாட்டு மற்றும் 3 உள்நாட்டு இன நாய்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்