இந்தோனேஷியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ள லூவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில் 42 பேர்  மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 115 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் இந்த கனமழையால் 1300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.